திங்கள், 24 அக்டோபர், 2011



கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


(இசை)


8717) வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறந்த நிலையை என்ன வென்று கூறுவார்கள்?

ஆலாபனை

8718) இசை என்பது இறைவனின் வடிவம் என்று எது கூறுகிறது?

மாண்டூக்ய உபநிஷத்

8719) நாதம் என பொருள்பட கூறுவது எதனை?

இசையை

8720) இறைவனின் நாத வடிவம் எது? ப்ரணவம்

8721) சன்னியாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விளக்கப்பட்டு இருப்பது என்ன?

இசை என்ற பாடல் வடிவம்

8722) சன்னியாசிகள் எவற்றில் மூழ்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது?

பாடல், நடனம், நாடகம் ஆகியவற்றில்

8723) சன்னியாசிகள் ஏன் இவற்றில் ஈடுபடக் கூடாது என கூறப்பட்டுள்ளது?

இவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.

8724) மதங்களையும் உருவங்களையும் கடந்த இறை நிலையை என்ன வென்பர்?

முழு முதற் கடவுளான பிரம்ம நிலை

8725) இவ்வாறு கூறியவர் யார்?

திருமூலர்

8726) தச அவதாரங்களில் இசைக் கருவியை கையில் வைத்திருக்கும் அவதாரம் எது?

ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812