கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர் ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8727) இலக்கியங்களில் முக்கியமானது எது?
வேதநூல்
8728)வாழ்க்கைக்கு மிக அவசியமான அனைத்தும் எதில் சொல்லப்பட்டுள்ளது.
வேதநூலில்
8729)இன்று மக்களிடையே வேதத்தைவிட செல்வாக்கு பெற்றுள்ளவை எவை?
புராணங்கள்
8730) கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், வானவியல், திருத்தலங்கள், விரதச் சிறப்புக்கள், பக்தியின் மேன்மை, வாழ்வின் ரகசியம் முதலியவற்றை உள்ளடக்கிய தத்துவ வடிவம் எது?
புராணங்கள்
8731) இந்த தத்துவ வடிவங்களை நிரம்பவே சொல்லி அழகு தமிழில் வடிவமைக்கப்பட்ட நூல் எது?
கந்தபுராணம்.
8732) முருகப்பெருமானின் பெருமையையும் ஆறுமுகக் கடவுளின் அருளின் அருமையையும் கூறும் நூல் எது?
கந்தபுராணம்
8733) மனிதன் செய்கின்ற குற்றங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இரண்டு
8734 )இரண்டு வகையான குற்றங்களையும் தருக
கிரிமினல், சிவில்
8735) இராமாயணம் எதை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது
கிரிமினல்
8736) இராமாயணத்தில் வரும் கிரிமினல் குற்றம் எது?
ஒருவனது மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்தி சிறை வைத்தது.
8737) மகாபாரத்தில் நடந்தது என்ன?
ஒருவன் சொத்தை இன்னொருவன் அபகரித்துக்கொண்டு ஏமாற்றியது
8738) இந்த இரண்டு குற்றங்களையும் சொல்லி நீதி புகட்டும் நூல் எது?
கந்தபுராணம்
8739) வேதங்களின் விழுமிய கருத்துக்களை விளக்கத் தோன்ற இதிகாசங்களில் புராணங்களில் முதன்மையானது எது?
கந்தபுராணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக