வியாழன், 12 செப்டம்பர், 2019

அறநெறி அறிவு நொடி



‘சனாதன தர்மம்’ என்ற அழைப்பது எந்த சமயத்தை?

இந்து சமயத்தை

சனாதன தர்மம் என்பதன் பொருள் என்ன?

‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும்.

இதனை இன்னும் விவரமாக கூறுவதாக இருந்தால் எப்படி கூறலாம்?

அதாவது எந்த வழியில் அணுகினாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் அடிப்படையாகும்.

இந்து சமய வாழ்க்கை என்பது எவற்றை அடிப்படையாகக் கொண்டது?

அன்பு, அறிவு, ஆற்றல், செல்வம், ஒழுக்கம், ஒற்றுமை, செயல், தியாகம், நம்பிக்கை ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

இதற்கு மேலும் உதவும் வகையில் 8 வகை குணங்களை இந்து சமயம் வரையறுத்துள்ளது. அவை எவை?

1. உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது. இதை வலியுறுத்தவே ‘அன்பே சிவம் அதுவே நலம்’ என்றனர்.

2. பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.

3. மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.

4. உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

5. தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.

6. எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமற்று இருக்க வேண்டும்.

7. எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.

8. எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.

இந்த எட்டு வகை குணங்கள் மூலம் எவற்றை பெறலாம்?

அறம், பொருள், இன்பம், வீடு அகிய நான்கையும் பெற முடியும்.

இவை எதற்கு உதவும்? இறைவனை எளிதில் காண உதவும்.

இந்து சமயத்தின் முக்கிய அம்சம் என்ன?

அது வேதங்கள் உபநிஷத்துக்ள், தத்துவங்கள், ஆகமங்கள், புராணங்கள், தர்மங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் தங்கி இருப்பதுதான்.

இந்து சமயத்தின் தனித்துவமான சிறப்பு என்ன?

எந்த நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்வது

மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளது எது?

இந்து சமயம்

அவ்வாறு சுதந்திரத்தை கொடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள நன்மை என்ன?

எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு ஒருங்கிணைந்த ஒன்றாக எளிமையானதாக வைத்துள்ளனர்.

இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எப்படி கூறலாம்?

மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறைவழி பாட்டில் எதிரொலித்தப்படி உள்ளது.

ஆதி காலத்தில் காதல் எவ்வாறானதாக கருதப்பட்டது?

புனிதமாக

அந்த புனிதம் இந்து இந்து மதத்தில் எவ்வாறு உணர்த்தப்பட்டது?

தெய்வங்களின் லீலைகள் மூலம்

சத்தியபாமாவை காதலித்து கரம்பிடித்தவர் யார்? கிருஷ்ண பரமாத்மா

தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியை காதலித்து திருமணம் செய்தவர் யார்?

முருகப்பெருமான்

அது போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஊடல் ஏற்படுவதையும்

இந்து மத இறைவழிபாட்டில் காணலாமா?

ஆம்.

சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் ஏற்பட்ட ஊடல் என்ன?

சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்ற ஊடல்

இறுதியில் யாருக்கு வெற்றி கிட்டியது? இதில் என்ன உணர்த்தப்படுகிறது?

சக்தி இல்லாமல் சிவன் இல்லை. சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது.

ஆண், பெண் இருவரில் யார் உயர்வு, யார் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவரும் சமம் என்பது ஆலய வழிபாட்டில் பல்வேறு வகைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கம் உணர்த்தும் தத்துவம் என்ன?

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கத்தின் தத்துவமே இதுதான்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வேறுயொரு வழிபாடு என்ன?

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812