வியாழன், 12 செப்டம்பர், 2019

சமய சமூகத் தொண்டர் பயிற்சி நெறிக்கான விண்ணப்பம்



சமூகத்தில் ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்கு நாட்கள் வதிவிட பயிற்சி நெறியொன்று தொண்டமானாற்றில் அமைந்துள்ள செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடத்தப்படவுள்ளது.

அப்பயிற்சி நெறிக்கு 21 வயதிற்குமேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இலங்கையில் எல்லாப் பாகத்திலிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சமய தீட்சை பெறுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்படும் . தீட்சை பெற்ற அன்றிலிருந்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சைவ உணவு மட்டுமே அருந்துவதற்கு உறுதி கொண்டவர்களாகயிருத்தல் வேண்டும்

இப்பயிற்சிகள் ஆகஸ்ட் மாதம் 23 ஆம்திகதி காலை 6மணிக்கு ஆரம்பமாகும். தூர இடத்திலிருந்து 22ஆம் திகதி இரவு8 மணிக்குள் சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு வரவேண்டும். தங்குமிடமும் உணவும் பயிற்சியும்இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் 15ரூபா முத்திரை ஒட்டி , சுய முகவரியிட்டநீள தபால் உறையில் சிவன் மானிடமேம்பாட்டு நிறுவனம்,48, புனித மரியாள் வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடித்த்தில் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு அனுப்பி விண்ணப்பத்தைபெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தினம் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி யாகும்.

பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெறுபவர்கள் சமயம், சமூகம் சார்ந்ததொண்டுச் செயற்பாடுகளில் தத்தம் மாவட்டங்களில் ஈடுபடலாம். பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் யாழ். குடாநாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு தல யாத்திரையாக அழைத்துச் செல்லப்படுவார்கள். தலயாத்திரை உட்பட பயிற்சி செயற்பாட்டிற்குரிய நாட்கள் மொத்தம்4 ஆகும்.

கலாதீனி பா.முருகானந்தன் உடப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812