திங்கள், 21 நவம்பர், 2011

கிராண்ட்பாஸ், டிவாஸ்லேனில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு மகரஜோதி பூiஜ



கொழும்பு, கிராண்ட்பாஸ், டிவாஸ்லேன் அருள்மிகு ஸ்ரீஞான வைரவர் சுவாமி தேவஸ்தானத்தின் ஸ்ரீ ஐயப்ப சுவாமி மகரஜோதி மண்டல பூஜைப் பெருவிழா கார்த்திகை மாதம் முதலாம் நாளன்று ஆரம்பமானது. இவ்வாலயத்தில் எதிர்வரும் 2011-01-15 ஆம் திகதி வரை 60 தினங்களுக்கு மண்டலபூஜை நடைபெறும்.

மண்டலபூஜை காலத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு இவ்வாலயத்தில் 18 விதமான விசேட பூஜைகள் நடைபெறும். இவ்வாலயத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி பம்பா கன்னிமூல கணபதி பூஜையும் 26ம் திகதி விஷேடதான்ய அலங்கார பூஜையும், 27ஆம் திகதி மாலை 5 மணிக்கு பால் அபிஷேகமும், 2011-12- 02 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு விஷேட த்ரவிய மஹா யாகமும் 2011-12-03 ஆம் திகதி மாலை 4 மணிக்கு விஷேட 108 சங்காபிஷேகமும் 2011-12-04ஆம் திகதி மணிகண்ட அலங்காரமும் 09ஆம் திகதி இராஜ அலங்காரமாக சமய சமூக சேவையாளர் கெளரவமும் இடம்பெறும். 10ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு அஷ்டோத்திதரசத (108) சங்காபிஷேகமும் 14 ஆம் திகதி புஷ்பாலங்கார பூஜையும் 17 ஆம் திகதி விஷேட விஷ¤க்கனி அலங்கார பூஜையும் இடம்பெறும்.

23 ஆம் திகதி தன அலங்கார பூஜை நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட நாணயங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். 24ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு சம்ஹார வேட்டைத்திருவிழாவும் 25 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு நெய் அபிஷேகமும் 30 ஆம் திகதி கற்பூர ஆழி ஜோதி பூஜையும் 2012-01- 01 ஆம் திகதி மாளிகைப்புரத்து மஞ்சமாதா பூஜையும் 04ம் திகதி பாதபூஜையும் 06 ஆந் திகதி கருப்பண்ணசாமி கருத்தசாமி பூஜையும் 07ம் திகதி ஸ்ரீ ஆஞ்சநேய பூஜையும் 15ஆம் திகதி மாலை 6.42க்கு மகரஜோதி பூஜையும் 16ஆம் திகதி ஸ்ரீ ஞான பைரவ மடையும் இடம்பெறும்.

2012- 01-28 ஆம் திகதி மாலை 7 மணிக்கு விசேட பூஜையின் நிறைவில் சபரிமலை பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாலயத்திலிருந்து எதிர்வரும் 2012-12-11ஆம் திகதி திருகோணமலைக்கும் 18 ஆம் திகதி ரம்பொடைக்கும் திருத்தல யாத்திரை மேற்கொள்ளப்படும். வியாகரண சிரோண்மணி சாகித்ய வியாகரணச்சாரிய பிரதம ஆதீன கர்த்தா பிரம்மஸ்ரீ இரா.

பால கிருஷ்ண ஐயர் சுந்தராம்பாள் தம்பதிகளின் நல்லாசியுடன் சர்வதேச இந்துமத பீடத்தலைவரும் ஜனாதிபதியின் இந்துமத இணைப்பாளருமான தேசபந்து சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியார் ஜேபி தலைமையில் பூஜைகள் யாவும் இடம்பெறும்., இவ்வாலயத்தில் 2012-12-05 ஆம் திகதி வரை விரத முத்திரை, மணி மாலை அணிவிக்கப்படும். இது 25வது வருட சபரிமலை யாத்திரை என்பதால் உபயங்கள் செய்பவர்களுக்கு விசேட ஞாபகார்த்த சின்னங்களும் கெளரவங்களும் அளிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812