திங்கள், 28 நவம்பர், 2011



கே. ஈஸ்வரலிங்கம், தலைவர் ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்


8788) தாரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

மகிழ்ச்சி

8789) தாய்க்குப் பின் மனைவி என்று சொல்லாமல், தாய்க்கு பின் தாரம் என்று ஏன் சொல்லி இருக்கிறார்கள்?

தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதனால்தான்.

8790) ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது, அது என்ன தெரியுமா?

மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை ‘தாரம்’ என அழைப்பர்.

8791) இந்த மந்திரத்தை உச்சரிப்போர் அடையும் பயன் என்ன?

பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர்.

8792) ஆன்மிகத்தில் உயர்ந்த சந்தோஷம் எது?

முத்தியை அடைவது

8793) காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வதை என்னவென்று கூறுவார்கள்?

சூரிய நமஸ்காரம்

8794) இயற்கை வழிபாட்டில் முதல் வழிபாடு எது?

சூரிய வழிபாடு.

8795) உலகின் முதல் வழிபாடு எது?

சூரிய வழிபாடுதான். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப் பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரிய வழிபாட்டின் தொடக்கமாகும்.

(கிரகங்கள்)

8796) வியாழன் என்ற குரு கிரகம் மனித உடலில் எதனை கட்டுப்படுத்துகிறது?

மூளையை

8797) மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும் வீணாவதற்கும் காரணமாக இருப்பது எந்த கிரகம்? சுக்கிரன்

8798) நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் கிரகம் எது?

சனி

8799) சுவாசத்தை கட்டுப்படுத்துவது எது?

புதன்

8800) செவ்வாய் கிரகம் நமது உடலில் எதனை ஆட்சி செய்கிறது?

இரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும்

8801) ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு எது குறைவாக இருக்கும்?

சிவப்பு அணுக்கள்

8802) இவ்வாறு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும் நபர் சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரை திருமணம் முடித்தால் என்ன நடக்கும்?

பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் சரியாக இருக்காது.

8803) லக்னத்தில் எந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் என கூறப்படுகிறது?

பொதுவாக லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால்

8804) செவ்வாயின் நட்புக் கிரகங்கள் எவை?

சூரியன், சந்திரன், குரு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812