திங்கள், 19 மார்ச், 2012

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

9008 ஸ்ரீ என்ற சொல் ஆணுக்குரித்தானது என்ற எண்ணம் ஏற் படக் காரணமாக இருப்பது என்ன?
ஸ்ரீமதி

9009 ஸ்ரீ என்ற சொல் பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் பயன் படுத்தப்படுகிறது. இது எதனால் ஏற்பட்டது?
மன்னராட்சிக் காலத் தாக்கத்தால்
ஒட்டி ஏற்பட்டது.

9010 ஸ்ரீ என்ற சொல் பிற சொற்களுடன் கூட்டுச் சொல்லாகவும் தொடர் சொல்லாகவும் பயன்படுத்தப்படுகின்ற விதத்தை உதாரணத்துடன் தருக.
ஸ்ரீலஸ்ரீ, நாட்டியஸ்ரீ, சங்கீதஸ்ரீ, லங்காஸ்ரீ, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

9011 எந்த மொழி பெயர்ச் சொற்களில் ஸ்ரீ காணப்படுகிறது?
வடமொழி வழிப் பெயர்ச் சொற்களில்

9012 வடமொழி வழிப் பெயர்ச் சொற்கள் சிலவற்றைத் தருக?
ஸ்ரீவித்யா, ஸ்ரீதர், ஸ்ரீராம்,
ராகஸ்ரீ, ஸ்ரீநிவாசன்.

9013) கணபதி, சூரியன், அம்பிகை, மகாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரே இடத்தில் வைத்துப் பூஜிப்பதை என்னவென்று கூறுவர்?
பஞ்சாயன பூஜை

9014) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் குறித்து முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளவை எவை?

* சுமங்கலிப் பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது.

* இரண்டு கைகளாலும் தலையை சொறியக் கூடாது.

* அடிக்கடி வீட்டில் அழக்கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ்நிலை ஏற்படும்.

* ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல.

* வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும் போதும் அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடு த்து உபசரிப்பது சிறந்தது.

* பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

* கர்ப்பிணி பெண்கள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் இருக்கக் கூடாது. காரணம் உடைக்கும் அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கக் கூடிய அபாயம் உள்ளது.

* எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.

* அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். வீட்டில் வேலைக்காரர்கள் இருந் தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு குடும்பப் பெண்ணே இந்தப் பணியை செய்யும் போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

* கைகளால் அன்னத்தையோ காய்கறிகளையோ பரிமாறக் கூடாது.

* வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவ னிடம் தெரிவிக்கும் போது ‘அது இல்லை’ என்ற வார்த்தை யைக் கூறாமல் அந்த பொருள் வேண்டும் என்று கூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812