திங்கள், 5 மார்ச், 2012
கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்
நிறைகுடம்
8979) சைவத் தமிழ் மக்கள் தங்கள் கலை, கலாசார சமூக, நிகழ்வுகளின் போதும் விசேட பண்டிகை கொண்டாட்டங்க ளின் போதும் சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் வரவேற்க என்ன வைப்பார்கள்?
நிறைகுடம்.
8980) சுபநாட்களில் வீட்டு வாசலில் நிறைகுடம் வைப்பதன் மூலம் ஏற்படும் நன்மை என்ன?
சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப் பெற்று இருக்கும்.
8981) நிறைகுடம் இருக்கும் இடத்தில் யார் வருவதாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது?
இலக்குமி
8982) உலகமும் அதிலுள்ள தாவர சங்கமப் பொருள்களும் சகல ஆத்மாக்களும் எதிலிருந்து உண்டாகின்றன?
நீரிலிருந்தே
8983) இவை மறுபடியும் பிரளய காலத்தில் எதில் லயமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது?
தண்ணீரிலேயே
8984) பூரண கும்பத்தின் அர்த்தம் என்ன?
ஆதிகர்த்தவாகிய இறைவனை நீரின் மூலம் உருவ வழிபாட்டுக்குக் கொண்டு வருவதே பூரண குடும்பத்தின் அர்த்தம்.
8985)மங்கள காரியங்களில் வைக்கப்படும் நிறைகுடங்களில் எத்தனை மாவிலைகள் இடப்படும்?
ஐந்து
8986) இந்த ஐந்து மாவிலைகளும் எதனை புலப்படுத்துவதாக அமைகின்றன?
ஐம்புலன்களை
8987) நிறைகுடத்தின் குடமும் நீரும் எதனை நினைவுபடுத்துகின்றன?
நமது உடலை.
8988) நிறைகுடமாகிய பூரண கும்பத்தை ஒரு முழுமதியாக ஒப்பிட்டவர் யார்?
கம்பர்
8989) மனித உடல், ஐம்புலன், சிரசு, இவற்றை அடக்கும் கருவியாக இடம்பெறுவது எது?
பூரண கும்பம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக