கே. ஈஸ்வரலிங்கம்,
தலைவர்/ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
9015) இறைவனை வணங்கும் போது எப்படி கைகூப்பி வணங்க வேண்டும்?
இரு கரங்களையும் கூப்பி தலைக்கு மேலே ஒரு அடி தூக்கி வணங்க வேண்டும்.
9016) குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?
நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
9017) தந்தையை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?
வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
9018) அறநெறியாளர்களை வணங்கும் போது எப்படி வணங்க வேண்டும்?
மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
9019) நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை எப்படி வணங்க வேண்டும்?
வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.
9020) ஒருவருக்குப் பணம் கொடுக்கும் போது வாசல்படியில் நின்று கொடுக்கலாமா?
கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும். அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
9021) எவற்றின் மேல் உட்காரக் கூடாது?
வாசல்படி, உரல், ஆட்டுக் கல், அம்மி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக