வியாழன், 10 ஜூன், 2021

ுருகன்

முருகனின் திருவுருவங்கள் எத்தனை? 16 அந்த 16 திருவுருவங்களும் எவை? 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள் யார்? ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடங்கள் எத்தனை? மூன்றாகும். அந்த மூன்று இடங்களும் எவை? திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், போரூர் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தது எங்கு? திருச்செந்தூர் தாரகாசுரனை வதம் செய்தது எங்கு? திருப்பரங்குன்றம், சூரபத்மன், தாரகாசுரன் ஆகிய இருவரின் சகோதரர் யார்? சிங்க முகாசுரன் சிங்க முகாசுரனை வதம் செய்தது இடம் எங்கு? போரூர் முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ளவை எவை? ஆயுதங்கள் முருகப்பெருமானின் வலப்புறத்தில் ஆயுதங்கள் எவை? அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் என்னென்ன இருக்கிறது? வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவை. முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை? திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், முருகன் யாரால் தாங்கப்பட்டான்? கங்கையால் கங்கையால் தாக்கப்பட்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? காங்கேயன் சரவணப் பொய்கையில் உதித்ததால் வந்த பெயர் என்ன? சரவண பவன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கார்த்திகேயன் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கந்தன் சண்முகப் பெருமானின் வாசஸ்தலம் எது? குமரக்கோட்டம் குமரக்கோட்டம் எங்கே உள்ளது? காஞ்சீபுரத்தில் கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூல் எது? திருப்புகழ் திருப்புகழ் நூலினை இயற்றியவர் யார்? அருண கிரிநாதர். முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று யார் பாடியுள்ளார் ? அருட்கவி அருணகிரி அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யார்? முருகன் ஆவான். முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் யார்? மகாகவி களிதாசர். யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் எங்கே செதுக்கப்பட்டுள்ளது? மாமல்லபுரத்துப் பாறைகளில் முருகனின் கையில் உள்ள வேல் என்னவென்று பெயர் பெறும்? இறைவனின் ஞானசக்தி என பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் யாரை காணலாம்? முருகனை பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகப்பெருமானுக்கு உண்டு. அது எது.? பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். 23. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார். 24. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது. 25. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது. 26. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும். 27. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும். 28. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன. 29. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும். 30. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும். 31. முருகனைப் போன்று கருப்பைப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர். 32. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம். 33. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள். 34. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார். 35. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது. 36. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது. 37. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும். 38. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது. 39. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம். 40. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812