திங்கள், 8 ஆகஸ்ட், 2011


கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்


8619) ‘மங்கல விளக்கேற்றல்’ என்னும் சொற்தொடரில் மங்கலம் என்பதன் பொருள் என்ன?

நன்மை, நலம், காரியசித்தி, பொலிவு, அறம்.

8620) மங்கல விளக்கேற்றல் என்பதன் பொருள் என்ன?

மங்கலத்தைத் தரும் விளக்கை ஏற்றி வணங்குதல்.

8621) மங்கல விளக்கு ஏற்றுவதற்கு வைக்கப்படும் குத்துவிளக்கை எந்தப் புறமாக வைக்க வேண்டும்?

கிழக்குப் புறமாக

8622) விளக்கின் சுடர் ஒளியில் தென்படுவது யாருடைய வடிவம்?

சிவத்தின் வடிவம்

8623) மஞ்சள் கிழங்கை உடைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து பின் உலர வைத்து தூள் செய்தால் கிடைப்பது என்ன?

குங்குமம்.

8624) மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து அந்த மஞ்சள் கரைசலில் கொஞ்சம் சுண்ணாம்பைக் கலந்தால் அது என்ன நிறமாக மாறும்?

சிவப்பு

இதனை என்னவென்பார்கள்?

ஆர்த்தி

8625) இவ்வாறு கரைத்த ஆர்த்தியை என்ன செய்வார்கள்?

அகன்ற தாம்பாளத்தில் ஊற்றி அதனை புதுமணமக்களின் முகத்துக்கெதிரே அல்லது புது வீட்டின் முன்பு அல்லது மங்கல நிகழ்ச்சியின் முக்கிய நபரின் முன்பு காட்டி தட்டை மூன்று முறை சுற்றியபின் ஆரத்தி நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றி விடுவார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812