கே. ஈஸ்வரலிங்கம்
தலைவர் / ஸ்தாபகர்
தமிழர் நற்பணி மன்றம்
8615) பூஜை ஆரம்பிப்பதற்கு முன் மணி அடிப்பது ஏன்?
அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர்தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம். எனவே ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டிவிட்டு பூஜையை ஆரம்பிப்பர்.
8616) ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி மணி அடிக்க வேண்டும்?
ஓடிப்போன துர் தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறு நாள் மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும்.
8617) துர்தேவதைகள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே என்று இருந்தால் என்ன?
அவை இருக்குமிடத்தில் தேவதைகள் இருக்க மாட்டார்கள்.
8618) கிராமங்களில் மார்கழி மாதம் அதிகாலையில் மணி அடித்து சங்கு ஊதி செல்வதால் ஏற்படும் நன்மை என்ன?
கிராமத்தில் உள்ள துர்தேவதைகள் ஓடிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக