செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011
தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
கொழும்பு -9 தெமட்டகொடை பேஸ்லைன் வீதி, மாவில ஒழுங்கை, 150ம் இலக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 2011-08-26ம் திகதி காலை 6.15 மணிக்கு நடாத்த திருவருள்; கூடியுள்ளது.
எதிர்வரும் 2011.08.23ம் திகதி நடைபெறும் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆம்பமாகும். எதிர்வரும் 2011.08.25ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.
சிவஸ்ரீ பா. சண்முகேஸ்வர குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெறும். கும்பாபிஷேக நிகழ்வுகளை தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். கும்பாபிஷேகத்தன்று அன்னதானமும் வழங்கப்படும். விஷ்வஸ்ரீ சே.ச. சந்தணகுமார் ஸ்தபதி தலைமையில் ஆலயத் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயத்தில் சித்தி விநாயகர் பெருமானுடன் சிவன், அம்மன், முருகன், மகா விஷ்ணு, தட்சணாமூர்த்தி, நவக்கிரகங்கள் ஆகிய பரிவார மூர்த்திகளின் திருவுருவட் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக