திங்கள், 15 ஆகஸ்ட், 2011

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம்

தலைவர் / ஸ்தாபகர்

தமிழர் நற்பணி மன்றம்

8626) ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கோயில்கள் எவற்றால் கட்டப்பட்டன?

செங்கல், மரத்தால்


8627) முதல் கற்கோயிலை எடுத்தவர் யார்?

மகேந்திரவர்ம பல்லவர்


8628) மகேந்திரவர்ம பல்லவர் எவ்வாறு கோயில்களைக் கட்டினார்?

மலையைக் குடைந்து செதுக்கி கோயிலாக்கினார்


8629) பாறைகளை துண்டுகளாக்கி கோயில் கட்டியவர் யார்?

இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்ம பல்லவன்.


8630) பாறைகளை துண்டுகளாக்க்கி எழுப்பப்பட்ட முதல் கோயில் எது?

காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயில்


8631) குன்றுகளைக் குடைந்து எழுப்பப்படும் கோயில்களை எவ்வாறு அழைப்பர்?

குடைவரைக் கோயில்


8632) பாறைகளை துண்டுகளாக்கி எழுப்பப்படும் கோயில்களை எவ்வாறு அழைப்பர்?

கட்டடக் கோயில்

8633) கட்டடக் கோயிலை வேறு எவ்வாறு அழைப்பர்?

கல்தளி, கற்றளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812