ஞாயிறு, 5 மே, 2019

Banana

வாழைமரம்





 

அறிவியல்ரீதியாக பார்த்தால் வாழைமரம் மரமே அல்ல, ஆனால் அதன் பலன்கள் மற்றும் அமைப்பிற்காக அது மரமாக கருதப்படுகிறது. வாழை மரம் அது வழங்கும் அற்புத பலன்களால் மிகவும் புனிதமான மரமாக கருதப்படுகிறது. வாழை மரமோ அல்லது வாழை இலைகளோ இல்லாத விசேஷங்களை பார்க்கவே முடியாது.

பழங்கால வேத நூல்களின் படி வாழை மரம் என்பது தேவர்களின் குருவான பிரஜாபதியை பிரதிபலிப்பதாகும். மேலும் இது குருவின் அருளை பெற்றுத்தரக்கூடியதாகும். குருவின் பிரதிபலிப்பாகவும் வாழைமரம் வேதங்களில் கூறப்படுகிறது.

இலைகளிலேயே மிகவும் புனிதமான இலையாக வாழை இலை கருதப்படுகிறது. அதனால்தான் அனைத்து சடங்குகளிலும் வாழை இலையில் கடவுளுக்கு படையல் வைக்கப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் வாழைப்பழம் ஆற்றலின் உறைவிடமாகும், அதனால்தான் அது முக்கனிகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இது அனைவரும் வாங்கக்கூடிய விலையில்தான் இருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812