ஞாயிறு, 19 மே, 2019

நமசிவாய




சைவசமய மந்திரங்களுள் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் எது?
மசிவாய மந்திரம்


நமசிவாய என்றால் என்ன?
“சிவனுக்கு வணக்கம்” என்று பொருள்


இம்மந்திரம் எந்த வேதத்தில் உள்ளது?
யஜுர் வேதத்தில்



யஜுர் வேதத்தில் எந்த பகுதியில் காணப்படுகிறது?

சிவபெருமானைப் போற்றும் புகழ்பெற்ற ஸ்ரீருத்திர மந்திரப் பகுதியில் காணப்படுகிறது.



இதனை என்னவென்று அழைப்பார்கள்?
பஞ்சாட்சரம்



இதனை வேறு எவ்வாறு அழைப்பார்கள்?
ஐந்தெழுத்து மந்திரம்



இம்மந்திரமத்தை வாயால் அல்லது மனதால் பலதடவை செபிக்கப்படுவதால் என்ன நடக்கும்?
நீக்கமற எங்கும் நிறைந்து முடிவற்றிருக்கும் சிவபெருமான் மீது மனம் ஒருநிலைப்படும்.

மந்திரங்களை கையாளும் முறை யாது?
அமைதியான காற்றோட்டமுள்ள இடம் அல்லது கோவில் போன்ற இடங்களில் அமர்ந்து மனதை வெறுமையாக்கி, முதலில் தங்கள் குலதெய்வத்தினை வணங்கி, பின் பெற்றோரையும் குருவினையும் மனதால் துதித்து மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும்.

முதலில் குறைந்தது எத்தனை முறை உச்சரிக்க வேண்டும்?
108 அல்லது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.

இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது என்ன நடக்கும்?
அந்த மந்திரங்கள் நமக்கு சித்திக்கின்றன என்கிறார்கள்.

பின் எத்தனை முறை உச்சாிக்க வேண்டும்?
எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 9 அல்லது 21 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்குமாம்.

தத்புருஷ மந்திரத்தின் மூல மந்திரம் எது?
'நமசிவாய'

இதை விடாது உச்சரிக்க என்ன ஏற்படும்?
உச்சாடணம் ஏற்படும்.

தத்புருஷத்தில் கருவூரார் எத்தனை மந்திரங்களைச் சொல்கிறார்?
25 மந்திரங்களைச் சொல்கிறார்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க என்ன நடக்குமாம்?
மழை பெய்யுமென்கிறார்.
"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க என்ன நடக்குமாம்?
புகழ் உண்டாகுமாம்.
"அங் சிவாய நம" என உச்சரிக்க என்ன நடக்ம் என்று அவர் கூஷகிறார்? குழந்தைப் பேறு உண்டாகுமாம்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க என்ன நடக்கும்?
மோட்சம் கிட்டுமாம்.
"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் யாரை வெல்லலாம்?
காலனை வெல்லலாம்.

அகோர மந்திரத்தின் மூல மந்திரம் எது?
"நமசிவ","சங் கங் சிவாயநமா"

இதனை உச்சரிக்க என்ன நடக்கும்?
ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் என்ன நடக்கும்?
உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812