வெள்ளி, 31 மே, 2019

பஞ்சாங்கம்



வாக்கியம் என்பது
இப்படித்தான் எதிர்காலம் இருக்கும் என்று முனிவர்களால் அறுதியிட்டு எழுதி வைக்கப்பட்டிருக்கும் சாஸ்திரம் எது?
வாக்கியம்

நடப்புக் காலத்தில் சூரியன் உதயமாவது, சந்திரன் உதயமாவது, பூமியின் சுழற்சி, நட்சத்திரங்களின் நிலை ஆகியவற்றை அதாவது கண்ணுக்குத் தெரிவதை வைத்து அப்போதைக்கப்போது காலத்தைக் கணிக்கும் சாஸ்திரம் எது? திருக்கணிதம்

த்ருக்+கணிதம் என்பதில் "த்ருக்' என்றால் என்ன?
"நேரில் காண்பது'.

"கணிதம்' என்றால் என்ன? கணிப்பது.

இந்த "த்ருக்கணிதம்' என்ற சொல்ல மருவி என்னவானது? திருக்கணிதமாயிற்று.

சூரியனும் சந்திரனும் நேர் எதிர் கோட்டில் சஞ்சரித்தால் வருவது என்ன? பௌர்ணமி

இருவரும் ஒன்றிணைந்தால் வருவது என்ன?
அமாவாசை

இவர்களின் சுற்றுப்பாதையில் இடையில் வேறு கிரகங்கள்- உதாரணமாக பூமி குறுக்கிட்டு அதன் நிழல் சூரியன் அல்லது சந்திரன் மீது விழும் பொழுது ஏற்படுவது என்ன?
கிரகணம்

நேரில் கண்டு கணிக்க வேண்டும் என்பதனால் அந்த பஞ்சாங்கத்திற்கு ஏற்பட்ட பெயர் என்ன? "த்ருக்-கணிதம்'

நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சஞ்சாரங்கள் வாக்கியத்தில் உள்ளதிற்கு ஒரு சில வினாடிகள் மாறுபடுவதாக ஆராய்ந்து அப்போதைக்கு அப்போது தெரியும் நட்சத்திர கிரக நிலைகளைக் கொண்டு கணித்துக் கூறுவது என்ன பஞ்சாங்கம்?
வாக்கிய பஞ்சாங்கம்

இரு பஞ்சாங்கங்களையும் பொறுத்த வரையிலும் உள்ள வேறுபாடுகள் என்ன?
நட்சத்திர நிர்ணயங்களிலும் விசேஷ தினங்கள் நிர்ணயங்களிலும் ஒரு சில மாறுபாடுகள் வருகிறதே தவிர மற்றயபடி அமாவாசை, கிரகணம் போன்றவற்றில் ஒற்றுமையே காணப்படுகிறது.


புனரபி என்பது என்ன?
நமக்குப் பல பிறவிகள் உண்டு. உயிர் என்றும் அழியாதது. நாம் ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வருவது போல நாமும் இப்பூமியில் பிறந்து, பிறந்து இறக்கிறோம். இதைத் தான் "புனரபி' என்கின்றனர்.

இதனை புனரபி என்று கூறியவர் யார்? சங்கரர்.

புனரபி என்பதற்கு என்ன பொருள்? "மீண்டும்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812