ஞாயிறு, 12 மே, 2019

சிவாயநம




சிவாயநம என்னும் அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் என யார் குறிப்பிட்டுள்ளார்?
சிவவாக்கியர்



இம்மந்திரம் எதனை அளிக்கவல்லது?

இம்மை-மறுமைப் பயன்களை அளிக்கவல்லது.

இம் மந்திரத்தை தவமிருந்து பெற்றவர் யார்?

மாணிக்கவாசகப் பெருமாள்
இம்மந்திரம் வேறு என்ன ஆற்றலை அளிக்கவல்லது? உலக இன்பங்களைத் தருவதோடு விரும்பும் காலத்தில் திருவடிப் பேற்றையும் அளிக்கவல்லது.
நடராஜமூர்த்தியின் ஞான நடனத்திருக்கூத்து எந்த பஞ்சாட்சரத் திருமேனி? சூக்கும பஞ்சாசரத் திருமேனி.



சிவாயநம என்பதில் சி- என்னது?
உடுக்கை ஏந்திய வலக்கரம்.
வா – என்னது ? தூக்கிய திருவடியைச் சுட்டும் இடதுகரம்.
ய – என்பது என்ன? அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.
ய – என்பது என்ன? அஞ்சேல் என்றருளும் வலது அபயகரம்.
ந – என்பது என்ன? அனலேந்திய இடக்கரம்.
ம – என்பது என்ன? முயலகனின்மேல் ஊன்றிய திருவடி.
இந்த ஞானம் திருநடனம் யாருக்காக நிகழ்த்தப்படுகிறது?

உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றை விரும்பும் ஆன்மாக்களுக்காக நிகழ்த்தப்பெறும் ஞானத்திருநடனம் இது.



ஞான மார்க்கத்தின் எத்தனையாம் படி?

இரண்டாவது படி இது.







து உயிராகிய ய வுக்கு இருபுறமும் சிவசக்தி காப்பாக இருப்பதால்இம்மந்திரத்தை என்னவென்று அழைப்பர்?
இதய மாணிக்க மந்திரம் என்று



உலகப்பற்றை அறவே ஒழித்து திருவடிப்பேற்றிலே மூழ்கியிருக்கும் தவசீலர்கள், இம்மந்திரத்தை ஜெபிப்பதன்மூலம் பெறும் நன்மை என்ன? இவ்வுடம்போடுகூடிய நிலையில் இவ்வுலகிலேயே பேரின்பத்தைப் பெறுவர்.
மகா காரண பஞ்சாட்சரம் எது? சிவசிவ


ய கரமாகிய உயிர் எதற்குள் ஒடுங்கியுள்ளது? சிவசக்திக்குள்ளே


சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினைமாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதிதானே
என இம்மந்திரத்தின் மகிமையை சிறப்பித்துக் கூறியவர் யார்? திருமூலர்



சிவ சிவ மந்திரத்தை தினமும் ஜெபிப்பவர் பெறும் நன்மை என்ன? சிவனும் தானும் பிரிவில்லாத நிலையான மேலான பேரின்பத்தைப் பெற்று விரைவில் உன்னத முக்தி நிலை பெறுவர்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812