புதன், 12 மே, 2021

முருகன்

முருகனின் திருவுருவங்கள் எத்தனை? 16 அந்த 16 திருவுருவங்களும் எவை? 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள் யார்? ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடங்கள் எத்தனை? மூன்றாகும். அந்த மூன்று இடங்களும் எவை? திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், போரூர் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்தது எங்கு? திருச்செந்தூர் தாரகாசுரனை வதம் செய்தது எங்கு? திருப்பரங்குன்றம், சூரபத்மன், தாரகாசுரன் ஆகிய இருவரின் சகோதரர் யார்? சிங்க முகாசுரன் சிங்க முகாசுரனை வதம் செய்தது இடம் எங்கு? போரூர் முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் உள்ளவை எவை? ஆயுதங்கள் முருகப்பெருமானின் வலப்புறத்தில் ஆயுதங்கள் எவை? அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் என்னென்ன இருக்கிறது? வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவை. முருகப் பெருமானை வணங்க உகந்த நாட்கள் எவை? திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், முருகன் யாரால் தாங்கப்பட்டான்? கங்கையால் கங்கையால் தாக்கப்பட்டதால் முருகனுக்கு ஏற்பட்ட பெயர் என்ன? காங்கேயன் சரவணப் பொய்கையில் உதித்ததால் வந்த பெயர் என்ன? சரவண பவன் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கார்த்திகேயன் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் வந்த பெயர் என்ன? கந்தன் சண்முகப் பெருமானின் வாசஸ்தலம் எது? குமரக்கோட்டம் குமரக்கோட்டம் எங்கே உள்ளது? காஞ்சீபுரத்தில் கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூல் எது? திருப்புகழ் திருப்புகழ் நூலினை இயற்றியவர் யார்? அருண கிரிநாதர். முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று யார் பாடியுள்ளார் ? அருட்கவி அருணகிரி அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவை யார்? முருகன் ஆவான். முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் யார்? மகாகவி களிதாசர். யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் எங்கே செதுக்கப்பட்டுள்ளது? மாமல்லபுரத்துப் பாறைகளில் முருகனின் கையில் உள்ள வேல் என்னவென்று பெயர் பெறும்? இறைவனின் ஞானசக்தி என பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் யாரை காணலாம்? முருகனை பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு ஒன்று முருகப்பெருமானுக்கு உண்டு. அது எது.? பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812