புதன், 12 மே, 2021
‘சனாதன தர்மம்’
இந்து சமயத்திற்குரிய வேறு பெயர் என்ன?
‘சனாதன தர்மம்’
இதன் பொருள் என்ன?
‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும்.
இதன் அடிப்படை என்ன?
அதாவது எந்த வழியில் அணுகினாலும் இறைவனை அடையலாம் என்பது இதன் அடிப்படையாகும்.
இந்து சமய வாழ்க்கை எவற்றை அடிப்படையாகக் கொண்டது?
அன்பு, அறிவு, ஆற்றல், செல்வம், ஒழுக்கம், ஒற்றுமை, செயல், தியாகம், நம்பிக்கை உட்பட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
மேற்கண்ட அனைத்தும் ஒருங்கிணையும்போது என்ன நடக்கும்?
அது ஒரு சிறந்த ஆளுமையை வளர்க்கும்.
இந்து சமயத்தின் இந்த ஒருங்கிணைந்த பயிற்சியைப் பெறும் போது என்ன நடக்கும்?
மனிதன் வாழ்க்கையில் சலனம் இல்லாத மேம்பாட்டை எட்ட முடியும்.
பொதுவாக இறைவனை அடைவதற்கான வழிகள் எத்தனை?
நான்கு
அந்த நான்கு வழிகளும் எவை?
கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம், ராஜயோகம்
இறைவனை நெருங்குவதற்கும்உதவும் வகையில் எத்தனை வகை குணங்களை இந்து சமயம் வரையறுத்துள்ளது?
எட்டு
அந்த எட்டு வகைகளும் எவை?
*உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது.
இதை வலியுறுத்த என்ன கூறப்படுகிறது?
‘அன்பே சிவம், அதுவே நலம்’
அந்த எட்டு வகைகளுள் மற்றையவை எவை?
* பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.
* மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.
* உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.
* தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.
* எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமற்று இருக்க வேண்டும்.
* எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.
* எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.
இந்த எட்டு வகை குணங்கள் மூலம் எவற்றை பெறலாம்?
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் பெற முடியும்.
இவை என்ன செய்யம்?
இறைவனை எளிதில் காண உதவும்.
இந்து சமயத்தின் முக்கிய அம்சம் எது?
இறைவனை காண வேண்டும் என்பதே ஆகும்.
எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு, ஒருங்கிணைந்த ஒன்றாக, எளிமையானதாக வைத்துள்ளனர். இதற்கு காரணம் என்ன?
இந்து சமயம் மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளதுதான்.
இதனை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் எப்படி சொல்லலாம்?
மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறை வழிபாட்டில் எதிரொலித்தப்படி உள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக