ஞாயிறு, 15 நவம்பர், 2020

ஐப்பசி மாதப் பௌர்ணமி (அறநெறி அறிவு நொடி)

ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் உரிய தனிச்சிறப்பு என்ன? அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுவதாகும். சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுவது எப்போது? ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் எது? அரிசி ஐப்பசி மாத பௌர்ணமி தினத்திற்குரிய சிறப்பு என்ன? வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பவது. இந்த அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்து உணவை சாப்பிட்டால் என்ன நடக்கும்? அன்னதோஷம், அன்ன துவேஷம் நீங்கும் அன்னம் பர பிரம்மம் என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது எந்த மதம்? நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது எது? அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர் வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் யார்? ஈசன். அன்னத்தை சாமவேதத்தில் எப்படி அழைக்கப்படுகிறது? அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ' இதன் பொருள் என்ன? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான் என்பதே ஆகும். உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை எது? அன்னம்தான் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்? உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகநடத்தப்படுகிறது. ஐப்பசி மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பா்? துலா மாதம் புரட்டாதி மாதம் யாருக்குரியது? பெருமாளுக்கு ஐப்பசி மாதம் யாருக்கு உரியது? ஈசன், முருகன் ஐஸ்வரியங்களை அள்ளித் தரும் மாதம் எது? ஐப்பசி தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து மேற்கொள்ளும் முக்கியமான விரதம் எது? கந்த சஷ்டி கந்த சஷ்டி எந்த மாதத்தில் வரும்? ஐப்பசி ஐப்பசியில் வேறு என்ன விரதம் வரும்? கேதார கௌரி விரதம் தீபாவளி பண்டிகை எந்த மாதம் வரும்? ஐப்பசி முருகப்பெருமானுக்கு எப்போது விரதம் கடைபிடிக்கப்படுகிறது? நாள், நட்சத்திரம், திதி ஆகிய மூன்று முறைகளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாள் விரதம் என்பது எதனை குறிக்கிறது? வெள்ளிக்கிழமை தோறும் கடைப்பிடிப்பதைக் குறிக்கும். இவ்விரதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? முருகன் சுக்ரவார விரதம் என்றழைக்கப்படுகிறது. நட்சத்திர விரதம் என்பது எது? கார்த்திகை விரதத்தையும், திதி விரதம் சஷ்டி விரதத்தையும் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812