ஞாயிறு, 15 நவம்பர், 2020
கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறை (அறநெறி அறிவு நொடி)
)ஆகம விதிகளின் படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் என்ன செய்யப்படும்?
சுத்தம் செய்யப்படும்
) சுத்தம் செய்யப்பட்டு பின் என்ன செய்யப்படும்?
ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் அமிழ்த்தி வைக்கப்படும்.
) எந்த ஜலவாசத்தில் வைக்கப்படும்?
அதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த
தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து வைப்பார்கள்.
) புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை எவ்வளவு காலம் ஜலவாசத்தில் வைப்பார்கள்?
ஒரு மண்டலம்
) ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்?
48 நாட்கள்
) ஜலவாசத்தில் இருக்கும் சிலை என்னவாகும்?
குளிர்ந்து உறுதியாக உருவாகும்.
) இவ்வாறு ஜலவாசத்தில் வைப்பதால் அறிவியல் படி எதனை அறியலாம்?
சின்னமான சிலையா அல்லது வழிபடத்தக்க சிலையா என்று அறியலாம்
)சின்னமான சிலை என்று எவ்வாறு அறியலாம்?
ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள்
நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது
வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம்.
) இவ்வாறு செய்வதால் என்ன நன்மை?
பின்னமான சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது.
) குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வதால் என்ன நடக்கும்?
அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.
) அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை என்ன?
ஜலவாசம்.
) 48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக என்ன செய்வார்கள்?
தானிய வாசத்தில் வைப்பார்கள்.
) தானிய வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்?
அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கப்படும்.
) இதனை என்னவென்று அழைப்பார்கள்?
தான்ய வாசம்.
) தான்ய வாசத்தில் எத்தனை நாட்கள் வைக்கப்படும்?
இதுவும் 48 நாட்கள் தான்.
) நவ தானியங்களோடு இங்கு வேறு என்ன வைக்கப்படும்?
நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள்
) மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் எத்தனை ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்?
ஆறு
) அந்த ஆறு வாசங்களும் எவை?
ஜலவாசம், தான்ய வாசம், ரத்ன வாசம், தன வாசம், வஸ்திர வாசம், சயன வாசம்
) ஜலவாசம், தான்ய வாசம் செய்யப்பட்டபின் என்ன செய்யப்படும்?
நவரத்தினங்களில் மூழ்க வைக்கப்படும்
) நவரத்தினங்களில் மூழ்க வைப்பதை என்னவென்று சொல்வார்கள்? ரத்ன வாசம்.
) ரத்ன வாசம் செய்தபின் என்ன செய்யப்படும்? தன வாசம் செய்யப்படும்
) தன வாசம் எப்படி செய்யப்படும்?
பொற்காசுகளில் மூழ்க வைக்கப்படும்
) தன வாசம் செய்த பின் என்ன செய்யப்படும்?
வஸ்திர வாசம்,
) வஸ்திர வாசம் எப்படி வைக்கப்படும்?
பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்ய வைக்கப்படும்.
) இறுதியாக எந்த வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும்?
சயன வாசத்தில்
) சயன வாசத்தில் வைக்கப்படுவதை என்னவென்று அழைப்பார்கள்?
ஹம்சதூளிகா மஞ்சம்
) சயன வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்?
அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு
பாதுகாக்கப்படும்.
) இந்த ஆறு வாசமும் எத்தனை நாட்கள் செய்யப்படும்?
48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள்
) இவற்றில் இப்போது எத்தனை வாசத்தால் முடித்துக் கொள்ளப்படுகிறது?
இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு
முடித்துக் கொள்ளப்படுகிறது.
) எனினும் தான்ய வாசத்தில் வேறு என்ன செய்யப்படுகிறது?
தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
) இந்த தான்ய வாசம் ஏன் செய்யப்படுகிறது?
நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில்
இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும் என்பதாலாகும்.
) நவதானியத்தில் இருந்து என்ன வெளியாகும்?
வெவ்வேறு விதமான வெப்பம்
) இந்த வெவ்வேறு விதமான வெப்பம் என்ன செய்யும்?
சிலையை தாக்கும்.
) 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் என்ன நடக்கும்?
அவை உடைந்து விடும்.
) அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் என்ன நடக்கும்?
சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும்.
) அதைப் போல ரத்தின வாசத்தில் என்ன நடக்கும்?
வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும்.
) அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் என்ன நன்மையை பெறும்?
தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
) 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகள் என்ன செய்யப்படும்?
பிரதிஷ்டை செய்யப் போகும் இரண்டு நாளுக்கு முன்னர் கண்கள் திறக்கப்படும்.
) இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப் பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல்
முறையிலான ஐதீகப்படி வைப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வரப்படும்.
இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது.
) இந்த வாசம் செய்யப்பட்டபின் என்ன செய்யப்படும்?
7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலை வைக்கப்படும்.
) புஷ்பாதி வாசம் என்பது எவ்வாறு செய்யப்படும்?
பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை வைக்கப்படும்.
) புஷ்பாதி வாசம் செய்யப்படுவதால் ஏற்படும் நன்மை என்ன?
அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின்
சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறும்.
) புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக என்ன செய்யப்படும்?
தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படும்.
) சயனாதி வாசத்தில் எவ்வாறு வைக்கப்படும்?
நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து
விடப்படும்.
) இந்த வாசத்தில் என்ன செய்யப்படுகிறது?
சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது.
) இத்தனைக்குப் பின் என்ன செய்யப்படும்?
கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.
) கண் எவ்வாறு திறக்கப்படும்?
தகுந்த பூஜைக்கு பின் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி
திறக்கப்படும்.
) கண் இவ்வாறு யாரால் திறக்கப்படும்?
தலைமை ஸ்தபதியால்
) அந்த சிலைக்கு தெய்வீகத் தன்மை ஊட்டப்படுவது எப்போது?
கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடக்கும் யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு
போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
) கடைசியாக செய்யப்படும் வாசம் என்ன?
ஸ்பரிசவாதி
) ஸ்பரிசவாதியத்தில் என்ன செய்யப்படும்?
ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி
உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படும்.
) இந்த காரியத்தை யார் செய்வார்?
கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக