ஞாயிறு, 15 நவம்பர், 2020

குலதெய்வ வழிபாடு (அறநெறி அறிவு நொடி)

பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும் அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது எந்த தெய்வம்? அவர்களது குலதெய்வம் மட்டுமே. அதற்குக் காரணம் என்ன? பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலதெய்வம் எவ்வாறு போற்றப்படுகிறது? குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுகிறது. தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி எந்த தெய்வத்திற்கு உண்டு? குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு. இவ்வாறு யார் என்று குறிப்பிடுகின்றனர்? சான்றோர்கள் ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை எது செய்யும்’ என்றும் சொல்வார்கள்? குலதெய்வம் குலதெய்வம் குறித்த ஆன்மிக ரகசியம் என்ன? ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது. குலதெய்வத்திற்குரிய சிறப்பு சக்தி என்ன? அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வழிபடலாம்? எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். அதில் ஏதாவது சிறப்பு உண்டா? ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம். தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது எது? பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் இவர்களை எவ்வாறு அழைப்பர்? வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி அந்த நிலையில் குலதெய்வம் என்பது எவ்வாறு இருக்கும் என கருதப்படுகிறது? ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்குமா? கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியுமா? முடியாது. ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு எத்தனை தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம்? மூன்று அந்த மூன்றும் எது? அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது குலதெய்வம். பிறகு காவல் தெய்வம். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமா? அவசியம். வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் என்ன நடக்கும்? நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும். குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள் என்னசெய்யலாம்? வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலை படிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்மூலம் குடும்பத்தின் குலதெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரையாகும். குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பது பற்றி யார் குறிப்பிடப்பட்டுள்ளார்? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் “ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே எவ்வாறு அழைக்கப்படுகிறது? ‘குலதெய்வம்’ முன்னோர்கள் என்றால் இங்கு யாரை கணக்கில் கொள்ள வேண்டும்? தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையில், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை என்னவென்று சொல்வார்கள்? ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் யாராக இருந்து இருந்திருப்பார்கள்? வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812