ஞாயிறு, 15 நவம்பர், 2020
நவராத்திரி (அறநெறி அறிவு நொடி)
நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது எந்த காலத்தில்?
சோழர் காலத்தில்
தமிழகத்தில் மக்கள் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக நவராத்திரி விழா மாறியது எந்த காலத்தில்?
நாயக்கர் காலத்திலிருந்து தான்
மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தியது எந்த காலத்தில்?
நவராத்திரி காலத்தில் தான்
ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குமுதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை வழங்கியவர் யார்?
மன்னர் திருமலை நாயக்கர்
தமிழகத்தில், நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது எது?
ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குமுதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை மன்னர் திருமலை நாயக்கர் வழங்கியதால் தான்.
நவராத்திரி நாட்களில் பெண்கள் எந்த பூஜை செய்தால் சகல செல்வங்களையும் பெறலாம்?
கன்யா
நவராத்திரி பண்டிகையை யார் முதன் முதலில் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது?
ராமர்
நவராத்திரி விரதத்தை ராமபிரான் கடைப்பிடித்த பிறகு என்ன நடந்தது?
அவருக்கு, சீதை இருக்கும் இடம் தெரிந்தது.
இவ்வாறு எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
தேவி பாகவத்தில்
நவராத்திரி நாட்களில்தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம் எது?
நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுவது எதற்கு?
அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே,
கொலு வைதப்பதன் அர்த்தம் என்ன?
அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்று அர்த்தம்
ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால், பிறகு எவ்வளவு காலம் கொலு வைக்க வேண்டும்?
வாழ்நாள் முழுவதும்
நவராத்திரியில் எதில் கோலம் போட வேண்டும்?
அரிசி மாவால்
அரிசி மாவால் கோலம் போடுவதால் ஏற்படும் நனமை என்ன?
குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும்
நவராத்திரி நாட்களில், சுண்ணாம்பு மாவால் கோலம் போட்டால் என்ன நடக்கும்? எதிர்மறையான விளைவுகளே உருவாகும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
-
16258) அறநெறிக் கல்வியின் “மகுட வாசகம்” என்ன? “கல்வியின் சிறந்த குறிக்கோள் பண்புடைமையே” 16259) அதன் “இலட்சிய நோக்கு” என்ன? சிறார்களி...
-
நமசிவாய என்பதற்கு என்ன பொருள்? சிவனை வணங்குகிறேன் என்பது பொருள். இறைவனின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக