ஞாயிறு, 15 நவம்பர், 2020

பெண்கள் அணியும் அணிகலன்களுக்கு காரணங்கள் (அறநெறி அறிவு நொடி)

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும் அலங்காரம் முழுமடைய அணிவிக்க வேண்டியது என்ன? தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் பெண்ணுக்குத் தரும் பரிசு சின்னம் என்ன? தாலி -எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே என்பதற்கு அணிவிக்கப்படுவது எது? தோடு மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்த அணிவிக்கப்படுவது என்ன? மூக்குத்தி கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும் என்பதற்காக அணிவிக்கப்படுவது என்ன? வளையல் கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக அணிவிக்கப்படுவது என்ன? ஒட்டியாணம் - எதிலும் பெண் கைத்திறன் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அணிவிக்கப்படுவது என்ன? மோதிரம் ஆலிலை தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது எது? ஆலமரம் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து ஞானம் தருபவர் யார்? தட்சிணாமூர்த்தி பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை எந்த மரத்துக்கு கீழே அமர்ந்து செய்வார்கள்.? ஆலமரத்துக்கு ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற மரம் எது? ஆலமரம் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் படுத்திருப்பவன் யார்? கண்ணன் கிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்றபடியால் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி என்ன? வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை ஆலிலைக்கு வேறு சக்தி என்ன? சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும் கண்ணன் படுக்க ஆலிலையை தேர்ந்தெடுக்க வேறு காரணம் இருக்கா? வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை என்பதாலும் சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருப்பதாலாகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால் என்ன நடக்கும்? அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. ஆலிலை தொடர்பில் இவற்றின் மூலம் புலப்படுவது என்ன? கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான் ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு போதிக்கும் பாடம் என்ன? அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812