சனி, 14 நவம்பர், 2020

கலைஞன் க. பாலேந்திரா

பல்துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞன் க. பாலேந்திரா 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆடிக்கலவரத்தால் இங்கிலாந்தை நாடிச் சென்று குடியேறியவர் கலைஞர் க. பாலேந்திரா. மேடை நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவருக்கு, கடந்த 47 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி வெற்றி கண்டு வரும் ஒரு இயக்குனர் க. பாலேந்திரா . தான் கற்ற கல்விக்கு ஏற்ப பொறியியல் துறையை முழு நேரத் தொழிலாக செய்து வருகின்ற இவர் , யாரிடமும் எந்த அமைப்புகளிடமிருந்தும் நன்கொடை எதுவும் பெற்றுக்கொள்ளாமல் தனது சொந்த செலவில் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி வருகின்றவர் இவர். இலங்கையில் தமிழ் மேடை நாடகத்துறை யின் வளர்ச்சி கேள்விக்குரியாகியுள்ள தருணங்களில் தொடர்ந்து பல மேடை நாடகங்களை மேடையேற்றி வெற்றி வருகின்ற பாலேந்திரா, யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு வருடா வருடம் நடந்து வரும் தேசிய நாடக விழாக்களே ஆரம்ப அனுபவங்களை கற்றுத் தந்த கலைகூடங்களாகத் திகழ்ந்தன. 1972ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலங்களில் இந்த பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் "நுட்பம்" என்ற சஞ்சிகை வௌியிட்டு வந்தது. இந்த இதழின் ஆசிரியராகவும் இந்த தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவருக்கு கலைஞர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. இவரை கலையுலகுக்கு அறிமுகப்படுத்தியது சுஹைர் ஹமீட் தயாரித்த ‘ஏணிப்படிகள்’ என்ற நாடகமே ஆகும். இந்த நாடகத்தில் இவர் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். அரசியல் கூட்டணிகளின் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் திரையிட்டு கோடியிட்டு காட்டிய இந்நாடகம் 01.07.1973ல் இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் 1974ல் யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டில் மேடையேற்றப்பட்டது. 1974ல் தாசீசியஸின் நெறியாள்கையில் தயாரிக்கப்பட்ட அலெக்சி அபுசோவின் ‘பிச்சை வேண்டாம்’ , ‘கந்தன் கருணை’ போன்ற நாடகங்களில் இவர் நடித்தார். இவர், ‘இவர்களுக்கு வேடிக்கை’, ‘கிரகங்கள் மாறுகின்றன’, ‘தூரத்து இடிமுழக்கம்’ ஆகிய நாடகங்களின் பிரதிகளை எழுதி நெறியாள்கையும் செய்திருந்தார். இவர் முதன்முதலாக தயாரித்து நெறியாள்கை செய்த நாடகம் "மழை". இந்த மழை நாடகம் 27.10.1976ல் கொழும்பு லயனல்வென்ற் அரங்கில் மேடையேற்றப்பட்டது. இலங்கையின் பல பகுதிகளிலும் இலங்கைத் தமிழர்கள் இடம்பெயர்ந்து வாழுகின்ற பல நாடுகளிலும் மேடையேற்றுப்பட்டு பட்டை தீட்டப்பட்ட ஒரு நாடகம் இது. இந்நாடகம் 22.07.2010 அன்று சென்னையில் மேடையேற்றப்பட்டது. பாடசாலை, கல்லுாரி, பல்கலைக்கழகம், இலக்கிய மன்றங்கள் ஆகியவற்றுக்கு அவ்வப்போது நாடகங்களை மேடையேற்றி வந்த ஒரு மாபெரும் கலைஞர் இவர். இவ்வாறு தொடர்ந்து நாடகங்களை மேடையேற்றி வந்த இவருக்கு , இதற்கென ஒரு அமைப்பு தேவையென்ற எண்ணம் எழத் தொடங்கியது. இதன் விளைவாக தமிழ் "அவைக்காற்று கலைக்கழகம்" என்ற அமைப்பை 1978ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மூலம் ஈழத்து நாடகாசிரியர்களான குழந்தை ம. சண்முகலிங்கம், மாவை நித்தியானந்தன், சி. சிவசேகரம், சி. மௌனகுரு, தர்மு சிவராம், சேரன், செழியன், ச. வாசுதேவன் ஆகியோரின் நாடகங்களை ேமடையேற்றி வந்தார். தமிழக நாடகாசிரியர்களான இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, ‘பசி’, ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’, ‘சுவரொட்டிகள்’, ஞான ராஜசேகரனின் ‘மரபு’, அம்பையின் ‘ஆற்றைக் கடத்தல்’ மற்றும் பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’, மோகன் ராகேஷின் ‘அரையும் குறையும்’, கிரிஷ் கர்னாட்டின் ‘துக்ளக்’, ரஞ்சித்ராய் சௌத்திரியின் ‘பாரத தர்மம்’ போன்ற நாடகங்களை இவர் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மூலமாகத் தயாரித்து மேடையேற்றினார். இது தவிர, மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் நாடகங்களாக டென்னசி வில்லியம்சின் ‘கண்ணாடி வார்ப்புகள்’, பிரெக்டின் ‘யுகதர்மம்’, கார்சியா லோர்காவின் ‘ஒரு பாலை வீடு’, செக்கோவின் ‘சம்பந்தம்’, வஸ்லோ காவலின் ‘பிரத்தியேகக் காட்சி , தரிசனம், பெக்கற்றின் ‘எப்போ வருவாரோ’, ஏரியல் டோப்மனின் ‘மரணத்துள் வாழ்வு’, இயூஜின் அயனஸ்கோவின் ‘இடைவெளி’, ஹரோல் பின்டரின் ‘போகிற வழிக்கு ஒன்று’ ஆகிய நாடகங்களையும் பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார். பாலேந்திராவின் நாடகங்களில் மனித குலத்தின் பொது அவலங்களைச் சொல்லும் பிரெக்டின் ‘யுகதர்மம்’ என்ற நாடகம் 19-80இல் இலங்கையில் மட்டும் 30 தடவைகள் மேடையேறியது. இவரின் நாடகங்களில் ‘இயக்க விதி 3’, ‘துக்ளக்’ ஆகிய நாடகங்கள் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகின. ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் "ஆறு நாடகங்கள்" என்ற நூலை அச்சடிப்பதற்காக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பகல் இரவுக்குக் காட்சிகளாக மேடையேற்றப்பட்டன. ‘மழை’, ‘அரையும் குறையும்’, ‘கண்ணாடி வார்ப்புகள்’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாடகங்கள். இந்த நாடகங்களில் ‘கண்ணாடி வார்ப்புகள்’ என்ற நாடகம் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவரது நாடகங்கள் இலண்டன், நோர்வே, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலும் மேடையேற்றப்பட்டுள்ளன. நாடகக் கலையிலுள்ள சகல நுணுக்களிலும் கைதேர்ந்த இவருக்கு இவரது துணைவியார் ஆனந்தராணி இவரது கலைத்துறை முயற்சிகளுக்கு பெரும் துணையாக இருந்து உதவி வருகிறார் . இவரது நாடகங்களும் அவை மேடையேற்றப்பட்ட ஆண்டுகளும் வருமாறு ச 01 இவர்களுக்கு வேடிக்கை 1974 02 கிரகங்கள் மாறுகின்றன 1974 03 தூரத்து இடிமுழக்கம் 1976 04 மழை 1976 05 பலி 1978 06 நட்சத்திரவாசி 1978 07 ஒரு யுகத்தின் விம்மல் 1978 08 கண்ணாடி வார்ப்புகள் 1978 09 பசி 1978 10 புதிய உலகம் பழைய இருவர் 1978 11 ஒரு பாலை வீடு 1979 12 இடைவெளி 1979 13 யுகதர்மம் 1979 14 நாற்காலிக்காரர் 1979 15 முகமில்லாத மனிதர்கள் 1980 16 திக்கு தெரியாத காட்டில் 1980 17 இயக்க விதி -3 1980 18 சுவரொட்டிகள் 1980 19 சம்பந்தம் 1980 20 அரையும் குறையும் 1981 21 மூன்று பண்டிதர்களும் காலம் சென்ற ஒரு சிங்கமும் 1981 22 துக்ளக் 1982 23 மரபு 1982 24 வார்த்தையில்லா நாடகம் 1983 25 பார்வையாளர்கள் 1985 26 எரிகின்ற எங்கள் தேசம் 1986 27 வேடரை உச்சிய- வெள்ளைப்புறாக்கள் 1991 28 பாரத தர்மம் 1991 29 பிரத்தியேகக் காட்சி 1991 30 தரிசனம் 1991 31 தப்பி வந்த தாடி ஆடு 1992 32 துன்பக் கேணியிலே 1992 33 நம்மைப் பிடித்த பிசாசுகள் 1993 34 இரு துயரங்கள் 1993 35 ஐயா இலெக்சன் கேட்கிறார் 1994 36 போகிற வழிக்கு ஒன்று 1994 37 மலைகளை அகற்றிய மூடக் கிழவன் 1996 38 ஆற்றைக் கடத்தல் 1996 39 எப்போ வருவாரோ 1997 40 அயலார் தீர்ப்பு 1997 41 அவசரக்காரர்கள் 1997 42 மெய்ச்சுடரே 1997 43 பெயர்வு 1998 44 ஒரு பயணத்தின் கதை 1998 45 பரமார்த்த குருவும் சீடர்களும் 1999 46 பார்வைக் கோளாறு 2000 47 காத்திருப்பு 2001 48 வேருக்குள் பெய்யும் மழை 2002 49 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 2003 50 அவன்.அவள் 2003 51 திக்கற்ற ஓலம் 2003 52 பெருங்கதையாடல் 2004 53 அரசனின் புத்தாடை 2004 54 சர்ச்சை 2006 55 மலைகள் வழிமறித்தால் 2006 56 பாவி? 2007 57 எல்லாம் தெரிந்தவர்கள் 2008 58 மரணத்துள் வாழ்வு 2009 59 படிக்க ஒரு பாடம் 2009 60 ஒற்றுமை 2010 61 இது ஒரு நாடகம் 2010 62 தர்மம் 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812